கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியாக தவித்த வெளிநாட்டவர்
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தனியாக தவித்த சீன பிரஜை ஒருவருக்கு விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உதவியுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி 65 வயதான சீன பிரஜை ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். எனினும் அவரின் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.
குறித்த நபர் சீனாவுக்கு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு இன்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.
விமானப் பயணச்சீட்டு
இது குறித்து தகவலறிந்த விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலையத்தின் அதிகாரி அடுத்தகட்ட நடவடிக்களை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக குறித்த சுற்றுலா பயணிக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளனர்.
அத்துடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகமவின் நேரடி தலையீட்டின் மூலம், சீனத் தூதரகத்தின் ஊடாக அவருக்கு பயணச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து குறித்த சீனப் பிரஜை நேற்று முன்தினம் யுஎல்-884 விமானம் சீனாவுக்கு சென்றுள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam