இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா சாம்பல்தீவு களப்பு பிரதேசத்திற்கு விஜயம்
இலங்கையின் கரையோர வள பாதுகாப்பு தாழ் நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா திருகோணமலை - சாம்பல்தீவு களப்பு பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் காணி அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக அப்பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பிரதேசத்திற்கான கள விஜயத்தை அவர் நேற்று மேற்கொண்டுள்ளார்.
களப்பு பிரதேசம் மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்தல் உட்பட மீனவ குடும்பங்களை வாழ்வாதாரம் மேம்பட பாரிய பங்களிப்பைக் களப்புக்கள் வழங்குகின்றன.
சாம்பல்தீவு களப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால் உடனடியாக உரிய நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சாம்பல்தீவு பிரதேசம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கை ஒன்றை தமக்கு வழங்குமாறும் இதன்போது அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அத்துடன், சுற்றாடலுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்போது சாம்பல்தீவு களப்பு பிரதேசத்தில் அமைச்சர் தலைமையிலான அதிகாரிகளால் கண்டல் தாவரங்களும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரள, கரையோரம் பேணல் கரையோர மூல வள பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அமைச்சரது பணி குழாத்தினர், உரிய அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
