கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள இராஜாங்க அமைச்சரால் பிரச்சினை இல்லை! நாடாளுமன்ற படைகள சேவிதர்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த 5ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமானது.
தாம் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தயாசிறி ஜயசேகர தனக்கு அறிவித்ததன் பின்னர், நாடாளுமன்றத்திலுள்ள சி.சி.ரி.வி. கமராக்களை ஆராய்ந்ததில் அவர் நாடாளுமன்றத்துக்குக் கடந்த சில தினங்களில் வருகை தரவில்லை என்பது உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நடத்திச் செல்வதில்எந்தவித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
