இலங்கைக்குள் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு தகவல் வழங்கும் முக்கியஸ்தர்கள்
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மிக அமைதியான முறையில் இடம்பெற்றதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் நல்லதொரு சான்றிதழை ரணில் விக்ரமசிங்கவிடம் தெரித்துள்ளதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், தேர்தல் காலங்களில் தேர்தல் தொடர்பான எந்தவொரு வன்முறை சம்பவமும் பதிவாக வில்லை என ஆய்வாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய ஊடகங்கள் பல கொழும்பில் முகாமிட்டு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கவை பல முறை சந்தித்துள்ளதாகவும் ஆய்வாளர் எம்.எம் நிலாம்டீன் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமின்றி, கடந்த தேர்தல்களை விட இம்முறை இடம்பெற்ற தேர்தலில் இந்தியா மிக தீவிரமாக செயற்படுவதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் ஆதிக்கம் தொடர்பில் ஆராய்கிறது ஊடறுப்பு,
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 6 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri