முந்தைய ஆட்சியில் வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு சென்றவர்கள் திருப்பி அழைப்பு
முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல் தொடர்புகள் ஊடாக வெளிநாட்டு இராஜதந்திரப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் டிசம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இன்று (06) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
”முந்தைய ஆட்சிக் காலத்தில் சில வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்காக தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் நியமனங்கள்
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு சேவைகளில் அனுபவம் பெற்றவர்கள் அல்ல, அவர்கள் அனைவரையும் அரசியல் நியமனங்கள் என்று வகைப்படுத்த முடியாது.

அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவிகள் ஆகியோர் தூதுவர் பதவிக்கு கீழான பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவர்களுக்கு டிசம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 20 நிமிடங்கள் முன்
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan