மட்டக்களப்பு - தொப்பிகல மலைப்பகுதியில் வெளிநாட்டு இராணுவம்
இலங்கை இராணுவத்திற்கும், வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்க்காகம் போர்ப் பயிற்சியானது நாளையுடன் நிறைவடையவுள்ளது.
குறித்த பயிற்சியானது மட்டக்களப்பு - தொப்பிகல மலைப்பகுதியில் இடம்பெற்று வருகிறது.
நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டிற்கான பயிற்சிகளே கடந்த 22ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த பயிற்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
எனினும் கடந்த 2017ஆம் ஆண்டு பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான், கென்யா மற்றும் ஈராக் ஆகிய நாட்டு இராணுவத்தினர் பயிற்ச்சியில் ஈடுப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.



அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan