இலங்கையில் நீடிக்கும் பதற்றம் - மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அவசரமாக அழைக்கப்பட்ட படை தளபதிகள்
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன ஆகிய இருவரையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் நாளைய தினம் முற்பகல் 10 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்குமூலம் பெறவுள்ளதாக அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில், தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.