சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்ட மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்
முத்தையன்கட்டு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை நடவடிக்கை இன்றையதினம் (25.07.2025) மேற்கொள்ளப்பட்டிருந்து.
உணவுப்பொருட்கள் அழிப்பு
இதன்போது முத்தையன்கட்டு வலதுகரை, முத்தையன்கட்டு இடதுகரை பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடவடிக்கை மேற்கொண்டவர்கள்
முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் லோஜிதன், ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் டிலக்சன் ஆகியோர் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
