அரச ஊழியர்கள் மத்தியில் எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை! பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தகவல்
இலங்கையின் அரச சேவையை இலத்திரனியல் அரச சேவையாக மாற்றி அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராகப் பதவியேற்றுள்ள பிரியந்த மாயாதுன்னே இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இலத்திரனியல்மயத்திற்கான காரணம்
கடதாசி தாள் பாவனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தின் சேவைகளை இலத்திரனியல் மயப்படுத்துவது அத்தியாவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், அத்தியாசியமில்லாத நாட்களில் அரச ஊழியர்கள் சீருடைகள் இன்றி விரும்பிய உடையணிந்து வரும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டினியை எதிர்கொள்ள தயார்படுத்தல்
அத்துடன் வீட்டுத் தோட்டங்களில் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்பட்டு எதிர்வரக் கூடிய பஞ்சம் மற்றும் பட்டினி என்பவற்றை எதிர்கொள்ள மக்களை தயார்படுத்தும் செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளவுள்ளதாகவும், பட்டதாரி உத்தியோகத்தர்களை இந்தச் செயற்பாட்டின் போது பயன்படுத்திக் கொள்ள உத்தேசித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
