சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு தண்ணீருற்று கிராமம்: சிரமத்தில் மக்கள் (Photos)

Mullaitivu Sri Lankan Peoples Weather
By Uky(ஊகி) Dec 17, 2023 12:35 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report

முல்லைத்தீவு தண்ணீருற்றில் வீதிகளை குறுக்கறுக்கும் வெள்ளத்தினால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைக்கு மாறாக ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சி மூலம் அதிகரித்த வெள்ளத்தினால் வீதிகளின் ஓரங்களில் உள்ள வடிகால்களின் கொள்ளளவிலும் கூடிய நீர் வரத்தால் வெள்ளம் வீதிகளை மூடிப் பாய்கின்றது.

இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் கொண்டு வரப்படும் தடை: வெளியான தகவல்

இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் கொண்டு வரப்படும் தடை: வெளியான தகவல்


தண்ணீரூற்று சைவப் பாடசாலை வீதியில் வெள்ளம்

தண்ணீரூற்று சைவப் பாடசாலை வீதியில் இரு இடங்களில் வீதிக்கு மேலாக வீதியை குறுக்கறுத்து வெள்ளம் பாய்கின்றது.

சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு தண்ணீருற்று கிராமம்: சிரமத்தில் மக்கள் (Photos) | Floods Cross Roads At Mullaitivu Watershed

நீரோட்டத்தின் உயரம் மூன்று அடிகளாக இருப்பதாகவும் அந்த வீதியைப் பயன்படுத்துவோர் குறிப்பிடுகின்றனர். இரு கிளை வீதிகள் சந்திக்கும் இடங்களிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீரூற்று குமுழமுனை வீதியை சைவப் பாடசாலை வீதியுடன் இணைக்கும் கிளை வீதியில் உள்ள வாய்க்கால் கொள்ளளவிலும் கூடிய நீரோட்டத்தினால் அது வீதியின் இணைப்பை குறுக்கறுத்து பாய்கின்றது.

இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்

இலங்கை மக்களை நசுக்கும் வற் வரி : ஆடம்பர கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள்


தண்ணீரூற்று புளியங்குளம் வீதியை சைவப் பாடசாலை வீதியுடன் இணைக்கும் கிளை வீதியிலும் இதே அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த இணைப்பு தாழ்வுப் பாலத்தினைக் கொண்டிருக்கின்றது.

சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு தண்ணீருற்று கிராமம்: சிரமத்தில் மக்கள் (Photos) | Floods Cross Roads At Mullaitivu Watershed

எனினும் வீதிக்கு குறுக்கான நீரோட்டத்தின் உயரம் அதிகமாக இருப்பதால் அதனூடாக பயணிப்போர் சிரமங்களுக்கு உள்ளாவதாக குறிப்பிடுகின்றனர்.

மழையின் தீவிரம் குறையாததால் இந்த தாக்கத்தினளவு நாளுக்கு நாள் அதிகரிக்கலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

குமுழமுனை தண்ணீரூற்று வீதியில் உள்ள அபாயம்

தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை: ஜனவரி முதல் மாற்றம்

தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை: ஜனவரி முதல் மாற்றம்


வீதிகளில் எதிர்பாராத இடங்களில் எல்லாம் வீதிக்கு மேலாக தண்ணீர் பல அடி உயரங்களுக்கு பாய்வதால் மழைநேரங்களில் பயணங்களை தவிர்த்துக் கொள்வது அனர்த்தங்களை தவிர்க்க உதவும் என வயலுக்கு சென்று திரும்பும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

முன்பெல்லாம் வீதியை குறுக்கறுத்து நீர் பாயாத இடங்களிலெல்லாம் இப்போது பாய்கின்றது. மழை பொழியும் நேரங்களில் நீரோட்டம் அதிகமாவதையும் மழை குறையும் போது நீரோட்டமும் குறைவதனையும் அவதானிக்கலாம் என மேலும் அவர்களில் பலர் குறிப்பிடுகின்றனர்.

சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு தண்ணீருற்று கிராமம்: சிரமத்தில் மக்கள் (Photos) | Floods Cross Roads At Mullaitivu Watershed

குமுழமுனை தண்ணீரூற்று வீதியின் கணுக்கேணி குளத்திற்கு கீழாகவுள்ள வீதியின் பிரதான பெரிய பாலங்களை தண்ணீர் மேவிப்பாயும் ஆபத்துக்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்தால் பாலங்களை மேவி நீரோட்டம் வீதிக்கு குறுக்காக பாயும் என திடமாக அவர்கள் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.

உயரமாக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட இந்த வீதியின் திருத்தத்திற்கு முன்னர் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வீதிக்கு குறுக்காக மூன்றடி உயரத்திற்கு நீரோட்டம் இருக்கும் என ஒருவர் தன் பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை


இயற்கையாகவே தாழ் நிலங்களை கொண்ட இடம்

தணணீரூற்றின் பல இடங்கள் இயல்பாகவே தாழ்நிலங்களாகவும் நீர்க்கசிவு கொண்டவையாகவும் இருப்பதனால் விரைவாக வெள்ளம் ஏற்படும் எனவும் இருப்பினும் விரைவாக அந்த வெள்ளநீர் வடிந்தோடிவிடும் எனவும் குறிப்பிடும் தண்ணீரூற்று முதியவர் ஒருவர் மழை பெய்து கொண்டிருக்கும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். அந்த நேரங்களில் அதிக நீரோட்டம் இருக்கும் எனவும் தண்ணீரூற்றில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் பாய்வது தொடர்பில் கருத்துக்களை கேட்டபோது பகிர்ந்து கொண்டார்.

சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு தண்ணீருற்று கிராமம்: சிரமத்தில் மக்கள் (Photos) | Floods Cross Roads At Mullaitivu Watershed

இந்த முறை மழையினால் கிடைத்த நீரினால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை ஊற்றுக் கசிவினால் நீரோட்டம் இருக்கும். இதனால் சிற்றாறுகள் தோன்றிப் பாயும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஆபத்தான நிலையில் 500இற்கும் மேற்பட்ட மரங்கள்

கொழும்பில் ஆபத்தான நிலையில் 500இற்கும் மேற்பட்ட மரங்கள்


மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்

காலநிலை அவதானிப்பகத்தினால் வடக்கில் தொடர்ந்து மழைப்பொழிவு நிகழும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாழ் நிலங்களில் நிரம்பும் நீரினால் வீதிகளை மேவிப்பாயும் நீரோட்டங்கள் அடிக்கடி தோன்றலாம் எனவும், அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு வீதிகளில் பயணிப்போர் முன்னெச்சரிக்கையோடு தங்கள் பயணங்களை திட்டமிட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ பிரிவில் பணியாற்றங்கூடிய அதிகாரியொருவர் வீதிக்கு குறுக்கான நீரோட்டம் பற்றிக் கேட்டபோது குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு தண்ணீருற்று கிராமம்: சிரமத்தில் மக்கள் (Photos) | Floods Cross Roads At Mullaitivu Watershed

மழைநேரங்களில் ஏற்படக்கூடிய வாகன விபத்துக்களையும் இயற்கை அனர்த்தங்களையும் முன்னெச்சரிக்கையோடு இருப்பதன் மூலம் இழிவளவாக்க முடியும்.

பொது மக்கள் பொறுப்புணர்ச்சியோடு செயற்படுதல் அனைவருக்கும் நன்மையளிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US