முத்தையன் கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டன
நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் திறக்கப்பட்ட முல்லைத்தீவு (Mullaitivu) - முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு குளங்களின் நீர்மட்டம் அதிகரித்திருந்தன.
இந்தநிலையில், கடந்த 25ஆம் திகதி முத்தையன் கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் 6 அடி வரை திறந்துவிடப்பட்டன.
வான்கதவுகள் மூடல்
இவ்வாறு திறந்துவிடப்பட்ட நீரானது பேராறு ஊடாக நந்திக்கடலை சென்றடைந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடலை சென்றடைகின்றது.

எவ்வாறாயினும், கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்ந்த காரணத்தினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முத்தையன் கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் கணக்கான விவசாயசெய்கைகள் மழைவெள்ளத்தினால் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri