முத்தையன் கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டன
நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் திறக்கப்பட்ட முல்லைத்தீவு (Mullaitivu) - முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு குளங்களின் நீர்மட்டம் அதிகரித்திருந்தன.
இந்தநிலையில், கடந்த 25ஆம் திகதி முத்தையன் கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் 6 அடி வரை திறந்துவிடப்பட்டன.
வான்கதவுகள் மூடல்
இவ்வாறு திறந்துவிடப்பட்ட நீரானது பேராறு ஊடாக நந்திக்கடலை சென்றடைந்து வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடலை சென்றடைகின்றது.
எவ்வாறாயினும், கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வட்டுவாகல் பாலத்தினை மூடி வெள்ளம் பாய்ந்த காரணத்தினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முத்தையன் கட்டு குளத்தின் வான் கதவுகள் மீள மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் கணக்கான விவசாயசெய்கைகள் மழைவெள்ளத்தினால் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
