இலங்கை பேரிடருக்கு நிதியுதவி வழங்கும் சீனா
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
சீன செஞ்சிலுவை சங்கம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்களை அவசர நிதி உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அவசர நிதி உதவி
மேலும், பேரிடர் நிவாரண முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, இலங்கையில் உள்ள சீன வர்த்தக சபை மற்றும் வெளிநாட்டு சீன சங்கம் ஆகியவை நன்கொடை திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

அதற்கமைய,, பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கூட்டாக 10 மில்லியன் ரூபாய் திரட்டியுள்ளன.
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam