வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!
மழை வெள்ளம் காரணமாக வடக்கு மாகாணத்தில் சுமார் 64000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 23000 ஹெக்ரயார் நெல் வயல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய அழிவுகள்
அதிகளவான பகுதிகளில் நெல் விதைக்கப்பட்ட சில தினங்களில் இவ்வாறு மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அநேக பகுதிகளில் குளக்கட்டுக்கள் உடைந்த காரணத்தினால் இவ்வாறு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கினாலும், அடுத்த போகத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அநேக பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan