இலங்கை பயணிகளின் பயணப் பொதிகளை வெளிநாடுகளிலேயே கைவிட்டுவிட்டு வரும் விமானங்கள்
இலங்கை பயணிகளின் பயணப் பொதிகளை வெளிநாடுகளிலேயே இறக்கி வைத்து விட்டு வரும் திட்டம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சொந்தமான இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு விமான எரிபொருள் கிடைக்காமையினால் அந்த நாடுகளில் இலங்கை பயணிகளின் பயணப்பொதிகளை இறக்கி வைக்கும் திட்டம் மறைமுகமாக முன்னெடுக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்கள் மூலம் இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, விமானங்கள் தங்கள் நாட்டுக்கு பறக்க தேவையான எரிபொருளுடன் இலங்கை வர வேண்டியுள்ளது. அதற்கு அவசியமான இடம் அவசியமாக உள்ளமையினால் பயண பொதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் எரிபொருள் தாங்கிகளின் எடையைக் குறைத்து இலங்கை வந்த விமானங்கள் கட்டுநாயக்கவில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும் செல்ல கூடிய சூழல் காணப்பட்டமையினால் பயண பொதிகளுக்கு அதிக இடம் வழங்க முடிந்தது.
இந்த நிலையில் தவறுதலாக பொதிகளை விட்டுவிட்டு வந்ததாக கூறி தினமும் பயணிகளின் பைகளை வெளிநாட்டு விமானங்களிலேயே கைவிட்டுவிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயணப்பொதிகளை இலங்கைக்கு கொண்டு செல்வதை விமான நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் மட்டும் இதுபோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைகள் அந்தந்த நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் கைவிட்டுவிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 14 மணி நேரம் முன்

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri
