திருமண நிகழ்வில் ஏற்பட்ட விபரீதம் - இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்
களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டலொன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண நிகழ்வில், இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவர் ஒருவரின் திருமணத்தின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது, மேலும் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
வாக்குவாதம்
தங்கள் நண்பரின் திருமணத்தின் போது மது அருந்திக்கொண்டிருந்த மருத்துவர்கள் குழு ஒன்று நடனமாடி மகிழ்ந்தனர்.
சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் வன்முறையாக மாறியமையால் மருத்துவர்கள் குழு மோதிக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருமண விழாவில் கலந்து கொண்ட இரு தரப்பினரின் உறவினர்களும் அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.
பொலிஸ் முறைப்பாடு
மோதலைத் தொடர்ந்து, இரு குழுக்களும் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் மோதலில் காயமடைந்த மருத்துவர்கள் சிலர் சிகிச்சைக்காக களுத்துறையில் உள்ள நாகோடா மருத்துவமனைக்குச் செல்வதாகக் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.