பொலிஸ் அதிகாரி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்
அனுராதபுரத்தில் பொலிஸ் அதிகாரியின் நேர்மையான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 18ஆம் திகதி விகாரைக்கு அருகில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணப்பை ஒன்று மறந்து விட்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பையை அதன் உரிமையாளர் தேடி பாதுகாப்பாக ஒப்படைக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பணப்பையின் உரிமையாளரை தேடி அவரிடம் அதனை பாதுகாப்பாக ஒப்படைக்க குறித்த பொலிஸ் அதிகாரி செயற்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த எஸ்.எம்.ஆனந்த சிறிபால என்ற பொலிஸ் அதிகாரியே இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை பாராட்டி அவருக்கு பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri