யாழில் தவெகவுக்கு ஆதரவாக பறக்கவிடப்பட்ட கொடி..! வெடிக் கொளுத்தி வெற்றியை கொண்டாடும் மக்கள்
புதிய இணைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொடி பறக்கவிடுதல், வெடிகளை கொழுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, யாழ்ப்பாணம் நகரத்தில் கொடிகளை தாங்கியவாறு, விசில் அடித்து, வெடி கொழுத்தி விஜய்யின் வெற்றியை இலங்கை மக்கள் கொண்டாடி வருகின்றார்கள்.
மேலதிக தகவல் - கஜீ
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - காக்கைதீவு கடற்கரையில் தவெக கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
யாழில் தவெக கொடி
இதற்கமைய, 234 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
அத்துடன், திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வளவு பரபரப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணம் - காக்கைதீவில் தவெக கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜீ
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு





