வீடொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் : 5 பெண்கள் கைது
ஹபரணை நகருக்கு அண்மித்த பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத தொழில்முறையில் ஈடுபட்ட 5 பெண்களை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
ஹபரணை பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது, தகாத நடவடிக்கைக்கு ஈடுபட்டிருந்த வீட்டில் தங்கியிருந்த 05 பெண்கள் மற்றும் பல கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீடு சுற்றிவளைப்பு
நேற்று காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32-42 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த விடுதியில் சோதனை நடத்தப்பட்ட போது அங்கு சேவை பெற வந்த 32 மற்றும் 42 வயதுடைய 2 ஆண்களை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30-45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் எனவும், அவர்கள் ஹபரணை, வவுனியா, குருநாகல், கெக்கிராவ மற்றும் கல்நேவ பிரதேசங்களை வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹிகுராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
