வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் ஐந்து பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் ஐந்து பேருக்கு இன்றிரவு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதில் அங்கு பணியாற்றும் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நேற்று மாலை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து குறித்த ஆடைத்தொழிற்சாலையில் தொற்றாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு தொகுதி முடிவுகள் இன்றிரவு வெளியாகிய நிலையில் அதில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்கள் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற போதும் அவர்கள் மருதமடு, கல்நாட்டாங்கல், பதவியா, மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam