வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் ஐந்து பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் ஐந்து பேருக்கு இன்றிரவு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதில் அங்கு பணியாற்றும் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நேற்று மாலை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து குறித்த ஆடைத்தொழிற்சாலையில் தொற்றாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு தொகுதி முடிவுகள் இன்றிரவு வெளியாகிய நிலையில் அதில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்கள் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற போதும் அவர்கள் மருதமடு, கல்நாட்டாங்கல், பதவியா, மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri
