புலிகளை அழிக்க யாழில் களமிறக்கப்பட்ட தலைசிறந்த ஐந்து இந்தியப்படை அதிகாரிகள்!
1987 இல் ஆரம்பமான இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் ஆரம்ப சண்டைகளில் அதிக இழப்புக்களுடன் முன்னகர முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது இந்தியப் படை.
எப்படியாவது புலிகளை முறியடித்து, அவர்களை அழித்து, அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றும் நோக்கோடு, இந்திய இராணுவத்தில் இருந்த தலைசிறந்த ஐந்து முக்கிய படைத்துறை அதிகாரிகளை, அவர்களுடைய படையணிகளுடன் சேர்த்து அனுப்பிவைத்தது இந்தியாவின் படைத்துறைத் தலைமை.
அந்த முக்கிய அதிகாரிகள் தலைமையிலான படையணிகள் பற்றியும், அந்த படையணிகள் இலங்கை மண்ணில் வகுத்த புதிய வியூகங்கள் பற்றியும், அந்தப் புதிய வியூகங்களில் இந்திய இராணுவத்திற்கு ஏற்பட்ட சவால்கள் பற்றியும், புதிதாகக் களமிறக்கப்பட்ட இந்தியப் படையணிகளினால் விடுதலைப் புலிகள் சந்தித்த நெருக்கடிகள் பற்றியும் பார்க்கின்ற நிகழ்ச்சி இது: