பிரித்தானியா - லங்காஷையரில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் - ஐவர் படுகாயம்
பிரித்தானியா லங்காஷையரில் - ஸ்கெல்மர்ஸ்டேலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து அம்பிலன்ஸ் சேவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சேவைகள் கையாளப்படுவதால் பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் பல வீடுகளில் அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam