ஈரானில் திடீரென்று மாயமான ஐந்து இராட்சத விமானங்கள்..!
ஈரான் நேற்றையதினம் அதிரடியாக கட்டாரிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது.
அமெரிக்கா ஈரான் மீது தாக்கியதற்கு அடையாள பதில் நடவடிக்கையை மேற்கோள்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை முன்பே அறிவித்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்காவை ஈரானுடனான நீண்டகால யுத்ததிற்கு இழுத்துவிடும் ஒரு சதியும் நடைபெற்று வருகின்றது.
அதற்கு ஆதாரமாக ஈரான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பமானதை தொடர்ந்து இந்த மாதம் 15 16, 17 ஆம் திகதிகளில் வட சீனாவிலிருந்து புறப்பட்ட 5 சரக்கு விமானங்கள் ஈரானின் வான் பரப்பிற்குள் நுழைந்ததும் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்ற தகவலை முன்வைக்கின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...