சர்வதேச கடல் எல்லைகளை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கையின் 18 ஆழ்கடல் மீன்பிடி படகுகள்
சர்வதேச கடல் எல்லைகளில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபடுவதாக கூறப்படும் 18 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றில் மீன்பிடிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மீன்பிடி திணைக்களத்தின் மிரிஸ்ஸ மீன்பிடி பரிசோதகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லையை மீறி அனுமதிப்பத்திரம் இன்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து இலங்கை கடற்படையின் விசேட குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
18 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை அனைத்து வெலிகமை , மிரிஸ்ஸ பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என மீன்பிடி திணைக்களம் கூறியுள்ளது.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan