முல்லைத்தீவில் மாயமான கடற்றொழிலாளர் குறித்து மனு கையளிப்பு
சட்டவிரோத கடற்றொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான மனு ஒன்று (20.06.2025) முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமூகத்தினரால் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக தொழில் செய்பவர்களின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் மாயமாகியமை தொடர்பில் பல சந்தேகங்கள் இருப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் மாயம்
இதனை தொடர்ந்து, சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கான மனுவை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனிடன் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சமூகத்தினர் ஒப்படைத்திருந்தனர்.
குறித்த மனுவில் மேற்படி எமது கடல் தொழிலாளர் சமுதாயம் கடலில் தொடர்ந்தும் சட்டவிரோத தொழிலாளர்களினால் அச்சுறுத்தபட்டும் எமது தொழில் உடமைகள் சேதப்படுத்தப்பட்டும் இறுதியாக உயிர் பாதிப்புக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தடயவியல் பொலிசார் மாயமான நபரின் படகில் காணப்பட்ட இரத்தகறையினை பரிசோதித்து மனித இரத்தம் எனவும் உறுதிப்படுத்தியுள்ளதாக கடலில் மாயமாகிய நபரின் சகோதரன் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 5 மணி நேரம் முன்

மிகப்பெரிய புதையலை கண்டுபிடித்துள்ள இந்தியாவின் அண்டை நாடு.., அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஜாக்பாட் News Lankasri
