திருகோணமலையில் பிரதான வீதியை மறித்து கடற்றொழிலாளர்கள் போராட்டம்
திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (5) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் தங்களது கடற்றொழிலாளர்களையும் படகையும் சேதத்துக்கு உள்ளாக்கி தாக்கியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வீதி மறியல் போராட்டம்
இதன் போது பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் ஒரு சில மணி நேரம் அப்பகுதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
கடற்றொழிலாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா, கடற்றொழிலாளரின் நிலமையை பார் உட்பட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதில் பல நூற்றுக்கணக்கான கடற்றொழில் குடும்பங்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
