ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸார் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
62 வயதுடைய 5 பெண் பிள்ளைகளின் தந்தையான பூபாலப்பிள்ளை யோகநாதன் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த நபர் நேற்று இரவு (02.05.2023) தனியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆற்றிற்கு சென்று வலையினை இட்டுவிட்டு மீண்டும் அந்த வலையினை எடுப்பதற்காக அதிகாலை சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் வலையினை எடுத்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு நோய் ஏற்பட்டு ஆற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இறந்த நபருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாகவும் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் வலிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டதோடு மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
