முல்லைத்தீவில் இடம்பெற்ற யுத்தத்திற்கு பின்னரான முதல் விவசாய குழு கூட்டம்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் யுத்தம் இடம்பெற்று 16 வருடங்களுக்கு பின்னர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விவசாய குழு கூட்டமானது இன்று(27.02.2024) மாந்தை கிழக்கு பதில் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஏற்பட்டுள்ள நோய்த்தாக்கங்கள்
இதன்போது திருநெல்வேலி விவசாய ஆராய்சி திணைக்கள உதவி விவசாய பணிப்பாளர் ராஜேஷ்கண்ணா கலந்து கொண்டு நெற் செய்கையில் ஏற்பட்டுள்ள நோய்த்தாக்கங்கள் உள்ளிட்ட தாக்கங்களுக்கு எந்தவகையான மருந்துகளை பாவிக்கலாம் என்பது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள். கமக்கார அமைப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், பாண்டியன்குளம் பிரதேச விவசாய போதனாசிரியர்கள், பிரதேச சபை செயலாளர் , கிராம மட்ட விவசாய அமைப்பினர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |