கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று மாணவி சாதனை
வெளியாகிய க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்/பாலிநகர் மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி பயின்ற சிவகுமாரன் மதுரா மாவட்ட ரீதியில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் இவர் யூடோ போட்டியில் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் கலந்து கொண்டுள்ளதுடன், வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தனியாகவும், குழுவாகவும் பங்குபற்றி பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
தனது வெற்றி தொடர்பான அனுபவத்தை அவர் பகிர்கையில்,
எனது குடும்பம் வறுமையானது. எனது தந்தை சாரதியாக பணிபுரிகின்றார். என்னையும் தம்பியையும் கல்வி கற்க வைப்பதற்கு அன்றாடம் அம்மா,அப்பா படும் கஷ்டங்களை எனது கண்களினூடாக பார்த்துள்ளேன். என்னைக் கல்வி கற்க வைப்பதற்கு எனது பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுகின்றனர்.
ஆதலால் அவர்களுக்கு நான் கௌரவத்தினைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். அதற்கான பலனையும் தற்போது பெற்றுள்ளேன். நான் இன்று இந்த நிலைக்கு வருவதற்கு வழிகாட்டியாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்தார்.

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan