லால் காந்தவிடம் முதல் விசாரணை! பட்டலந்த தொடர்பில் தலதா முன்வைத்துள்ள கோரிக்கை
பட்டலந்த ஆணைக்குழு குறித்து மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தாவிடமிருந்து முதல் அறிக்கையை பெற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (மார்ச் 18) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
1987 - 89ஆம் ஆண்டு காலத்தில் ஜே.வி.பி.க்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்த மற்றும் ஜே.வி.பி.க்கு எதிராக சாட்சியமளித்த பிக்குகள், கிராம அதிகாரிகள் மற்றும் பலர் கொல்லப்பட்டதாக லால் காந்த கடந்த தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறியதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிக்கை
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அமைச்சரின் அறிக்கையை பலர் பார்த்ததாகவும், அந்த காணொளி தன்னிடம் இருப்பதாகவும் அதுகோரல கூறியுள்ளார்.
அமைச்சர் இத்தகைய அறிக்கையை வெளியிட்டது ஒரு தீவிரமான விடயம் என்றும், அதன்படி, 1987- 89 காலகட்டம் தொடர்பான விசாரணைகளில் லால் காந்தாவின் பெயர் முதல் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தப் பயங்கரவாதக் காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிதான் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறிய பொதுச் செயலாளர், அந்தக் காலகட்டத்தில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
