அரச மருத்துவமனையொன்றில் செயற்கை கருத்தரித்தல் மூலம் பிறந்த முதலாவது குழந்தை
இலங்கையின் அரச மருத்துவமனையொன்றில் செயற்கை கருத்தரித்தல்(IVF) மூலம் கருவான முதலாவது குழந்தையின் பிறப்பு, அரச சுகாதாரப் பராமரிப்பில் இடம்பெற்றுள்ளது.
ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் சிசேரியன் முறையில் நேற்று(31) இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.
களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் ஒரு வருட கால முயற்சியைத் தொடர்ந்து இநத வெற்றிகரமான பிறப்பு நிகழ்ந்துள்ளது.
செயற்கை கருத்தரிப்பு
குழந்தையை பிரசவித்த 31 வயதான தாயும் அவரது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

செயற்கை கருத்தரிப்பு செயன்முறை முதன்முதலில் கடந்த ஆண்டு குறித்த பல்கலைக்கழகத்தின் கருவுறுதல் மையத்தில் நடத்தப்பட்டது. இந்த பிரசவம் பேராசிரியர் ரசிகா ஹேரத் தலைமையில் நடைபெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri