புதுக்குடியிருப்பில் முதல் முறையாக இரு மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்றுள்ள பாடசாலை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய வரலாற்றில் முதன் முறையாக இரு மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவர்கள் பலர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
சுதர்சன் வேணுயா, அன்பழகன் மீனுயா ஆகிய இரு மாணவர்களே 9 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளார்கள்.
மேலும் 47 மாணவர்களுக்கு மேல் உயர்தரம் கற்கக்கூடிய பெறுபேற்றினை பெற்றுள்ளார்கள்.
கோவிட் - 19 தாக்கத்தினால் பாடசாலைகள் முடக்கப்பட்ட நிலையிலும் மாணவர்களின் முயற்சி மற்றும் ஆசிரியர்கள் அதிபரின் வழிகாட்டல், பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு, பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பவற்றுடன் மாணவர்கள் தொடர்ச்சியான கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு சாதித்துள்ளனர்.