களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
களுத்துறையில்(Kalutara) இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஹொரணை - கிரேஸ்லேன்ட்வத்தை பகுதியில் வைத்து சொகுசு கெப் ரக வாகனத்தில் பயணித்த நபரொருவர் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் சந்தேகம்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |