மஸ்கெலியா குயின்ஸ் லேண்ட் தோட்ட தொடர் குடியிருப்பில் தீப்பரவல்
மஸ்கெலியா குயின்ஸ் லேண்ட் தோட்டத்திலுள்ள தொடர் குடியிருப்பில் இன்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தில் இருபது வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றே இன்று பிற்பகல் 2 மணியளவில் தீப்பற்றிக் கொண்டுள்ளது. குறித்த தீ விபத்து காரணமாக குடியிருப்பின் இரு பக்கங்களிலும் அமைந்திருந்த இருபது வீடுகள் முற்றாக தீக்கிரையாகி உள்ளன.
சம்பவத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தற்காலிகமாக குயின்ஸ் லேண்ட் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மவுசாகலை இராணுவ முகாம் சிப்பாய்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தொழிலாளர்களின் அத்தியாவசிய ஆவணங்கள், உடு துணிகள், தளபாடங்கள், பாடசாலை உபகரணங்கள் என்பன முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத போதிலும் மின் ஒழுக்கு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட் News Lankasri
