வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருந்தகத்தில் தீப்பரவல் (Photos)
கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருந்தகம் நேற்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது.
மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இருப்பினும் அன்றையதினம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மக்களுக்கான மருத்துவசேவை தடையின்றி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாரும், தடயவியல் பிரிவினர் மற்றும் பிராந்திய சுகாதார சேவையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக செய்தி - எரிமலை