திருகோணமலையில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் தீவிபத்து
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று (19) தீப்பற்றியுள்ளது.
இதனால் பல பொருட்கள் தீயில் நாசமடைந்துள்ளன. குறித்த பகுதி பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த இடத்துக்கு திருகோணமலை தீயணைப்பு பிரிவு வருகை தந்தது.
கடுமையான சேதம்
மேலும், இலங்கை மின்சார சபையினரும் குறித்த இடத்துக்கு விஜயம் செய்து குறித்த ஒரு பகுதியின் மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

இதன்போது, உயிர்ச் சேதம் எதுவும் இல்லை எனவும் தெரியவருகிறது. எரிவாயு வெடித்ததில் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொஸிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தம்பலகாமம் பிரதேச சபைக்கான தீயணைப்பு வாகனம் இன்மை பெரும் குறைபாடாக காணப்படுவதுடன் தற்போது தீயணைப்பு வாகனத்தின் தேவை உணரப்படுகிறது.
திருகோணமலை மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் சுமார் அரை மணி நேரத்திற்கு பின் குறித்த சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan