லிந்துலை லயன் குடியிருப்பில் திடீர் தீ விபத்து!
லிந்துலை பிரதேசத்தில் தோட்ட லயன் குடியிருப்பில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீப்பரவலானது இன்று(25.07.2023) இரவு 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
தீ பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் தற்போது தீ பல வீடுகளுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில், லிந்துலை பொலிஸாரும் தோட்ட தொழிலாளர்களும் இணைந்து தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த குடியிருப்பில் சுமார் 24 வீடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், லிந்துலை பொலிஸாருடன் இணைந்து சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
தீயினால் பாதிக்கப்பட்ட உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும்
லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









