தனியார் மருந்தகத்தில் தீ விபத்து
நுவரெலியா மாவட்டம் - பூண்டுலோயா பிரதான நகரில் தனியார் மருத்தகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (06.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக தீவிபத்து இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனையின் மூலம் தெரியவருகிறது.
பொலிஸார் விசாரணை
இதன்போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறியவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் பூண்டுலோயா பொலிஸாரும், நுவரெலியா தடயவியல் பிரிவினரும் இணைந்துள்ளனர்.
செய்தி - செ.திவாகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |