பின்லாந்தில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் திடீர் மரணம்
பின்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்து தங்கியிருந்த நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இந்த வெளிநாட்டவர் சுகயீனம் காரணமாக திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
2018ஆம் ஆண்டு முதல் பெரலிஹெல-திஸ்ஸமஹாராம பகுதியில் இலங்கையர் ஒருவருடன் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளார்.
இந்த வெளிநாட்டவர் Lofstrom Goren Wilhelm என அழைக்கப்படும் 78 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த நபர் தொடர்பான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
