சுகாதார எச்சரிகைப்பட காட்சிப்படுத்தல் இல்லாததால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலைமை
தெல்லிப்பளையில் வர்த்தக நிலைய உரிமையாளரொருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார எச்சரிக்கை
குறித்த வர்த்தக நிலையத்தில், தேசிய மது மற்றும் புகையிலை அதிகார சபை சட்ட சரத்துகளின்படி 80% வீத சுகாதார எச்சரிக்கைப்பட காட்சிப்டுத்தல் இன்றி புகையிலைசார் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த மற்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தெல்லிப்பளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் இனி இவ்வாறான குற்றசெயலை செய்ய வேண்டாம் என எச்சரிக்கையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு
புகைத்தல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்படும் இவ்வாரத்தில் புகையிலைசார் பொருள்கள் தொடர்பான தொடர் சோதனைகளில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் பரா நந்தகுமார் தலைமையில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது தொடர் எச்சரிக்கைகளை மீறி, 21 வயதுக்குட்பட்டோருக்கு புகையிலை விற்பனை செய்வோர் மற்றும் 80% சுகாதார எச்சரிக்கை இன்றி தனித்தனியாக சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை துண்டு விற்பனை செய்யும் சில வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகவும் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு வர்த்தக நிலையத்திற்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு சிலவற்றுக்கு விசாரணைக்கு திகதி இடப்பட்டுள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
