நாங்கள் ஜனநாயக வழியில் தீர்வு காண முயல்கின்றோம்: நாடாளுமன்றில் சாணக்கியன் தெரிவிப்பு

Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam Eastern Province Northern Province of Sri Lanka
By Rakesh Aug 20, 2025 08:06 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம், எம்மை இனவாதியாக சித்தரிக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர், ஜனநாயக அடிப்படையில் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகார சபைச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

கடையடைப்பிற்கு அழைப்பு

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹர்த்தால் பற்றி கடையடைப்பிற்கு ஆதரவு வழங்கியவர்களும், ஆதரவு வழங்காதவர்களும் பல்வேறு விடயங்களைக் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகின்றது. இலங்கைத் தமிழரசு கட்சியால் கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாங்கள் ஜனநாயக வழியில் தீர்வு காண முயல்கின்றோம்: நாடாளுமன்றில் சாணக்கியன் தெரிவிப்பு | Find A Solution Through Democratic Means Chanakya

அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வர்த்தக சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் உட்படப் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். முல்லைத்தீவு இளைஞரின் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோம். இந்த விடயம் சமூகவலைத்தளங்களில் திரிபுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் ஹர்த்தால் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைப் பேச்சாளர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் கலந்துகொண்டார்கள். இதனைத் தொடர்ந்தே ஹர்த்தாலை நண்பகல் வரை வரையறுக்கத் தீர்மானித்தோம். உயிரிழந்த இளைஞருக்கும், இராணுவத்தினருக்கும் தொடர்புள்ளது. அதனடிப்படையில் இராணுவப் படையினர் ஒருசிலர் கைது செய்யப்பட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அனைத்து இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டும்.

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்

இராணுவத்தின் நிலைப்பாட்டுக்கும், பொலிஸாரின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இராணுவ முகாமுக்குள் வந்த ஒரு இளைஞரை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். முகாமுக்குள் அத்துமீறிய வகையில் இவர்கள் சென்றிருந்தால் அவர்களைக் கைது செய்து பொலிஸில் ஒப்படைத்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் தெளிவான சிக்கல் காணப்படுகின்றது.

நாங்கள் ஜனநாயக வழியில் தீர்வு காண முயல்கின்றோம்: நாடாளுமன்றில் சாணக்கியன் தெரிவிப்பு | Find A Solution Through Democratic Means Chanakya

வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்கள் மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். எம்மை இனவாதியாகச் சித்தரிக்க ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் கடைகள் மூடப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஹர்த்தாலைப் பலவீனடையச் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் செயற்பட்டுள்ளார்கள்.

ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றோம். நாங்கள் ஜனநாயகக் கொள்கைக்கு அமைவாகவே செயற்படுகின்றோம். எமது பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வையே எதிர்பார்க்கின்றோம் என்றார்.

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Montargis, France

05 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US