இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் புதிய உறுதிமொழி!
மொரகொட- நிர்மலா சந்திப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம், இந்த உறுதிமொழி நேற்று வழங்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள இந்திய நிதியமைச்சில் நிர்மலாவை சந்தித்தபோது இந்த உறுதிமொழியை வழங்கப்பட்டது.
ஏற்கனவே 65,000 மெட்ரிக் டன் யூரியாவை இறக்குமதி செய்வதற்காக ஜூன் 10 ஆம் திகதி இந்தியாவினால் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் பருவ பயிர்ச்செய்கைக்கு உரத்தை வழங்கக்கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மொரகொட- ஜெய்சங்கர் சந்திப்பு
உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் அண்மையில் சந்தித்திருந்தார்.