கூட்டுப் பொறுப்பை மீறியது பசில் தான்! மூன்று அமைச்சர்கள் பகிரங்க தகவல்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை மீறிச் செயற்பட்டார் என ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
யுகதெனவ் மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது தமது தரப்பு சட்டத்தரணிகள் ஊடாக அமைச்சர்கள் இந்த விடயத்தை நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த எகலஹேவா, அமைச்சர்களின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை பத்திரமொன்று தொடர்பில் அமைச்சர்களினால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை கூட்டுப் பொறுப்பினை மீறும் செயல் என அமைச்சரவையின் செயலாளர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார். அரசியல் அமைப்பின் 41(3) மற்றும் 45(3) ஆகிய சரத்துக்களை மீறும் வகையில் அமைச்சர்கள் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், யுகதெனவ் மின் நிலையம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவே இல்லை எனவும் இதனால் இந்த விடயத்தில் கூட்டுப் பொறுப்பினை மீறியது நிதி அமைச்சரேயாகும் எனவும் வாசு, விமல் மற்றும் உதய சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தமது கட்சிக்காரர்கள் அரசியல் அமைப்பினை மீறியதாகவோ கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகியதாகவோ குற்றம் சுமத்தப்பட முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் இது பற்றிய அமைச்சர்கள் அறிந்திராவிட்டால் அதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது எனவும் சட்ட மா அதிபர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வவுனியாவிலிருந்து கனடாவிற்கு - வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன் 38 நிமிடங்கள் முன்

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022