விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு: மக்கள் திரண்டு வந்து பங்கேற்பு

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Uky(ஊகி) Nov 27, 2023 07:19 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மக்கள் திரண்டு வந்து ஏற்பாடுகளில் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.

இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு பாராட்டும் படியாக இருக்கின்றது என ஏற்பாட்டுக்குழு சார்பாக பேசவல்லவர் குறிப்பிட்டார்.

இளையவர்கள் ஆர்வமிகுதியோடு துயிலுமில்லத்தின் பரப்பெங்கும் பறந்து செல்வதை அவதானிக்கும் போது ஆனந்தம் ஊற்றெடுப்பதாக மாவீரர்களின் பெற்றோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்(Video)

மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்(Video)


கார்த்திகை 27 இறுதி நாள் ஏற்பாடுகள்

மாவீரர் நாளான கார்த்திகை 27 இன்று மாலையில் விளக்கேற்றி மாவீரர்களை அஞ்சலிப்பதற்கான ஏற்பாடுகளில் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டு வருவதாகவும் இன்றோடு எல்லா பணிகளையும் செய்து முடித்து விட்டதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு: மக்கள் திரண்டு வந்து பங்கேற்பு | Finalday Arrangements Completed Maweerar Mullitivu

விளக்கேற்றுவதற்கான தீபங்கள் தயார்படுத்தப்பட்டு நிரல்படுத்தப்பட்டு நடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீபத்தோடும் தென்னம் பிள்ளை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மாவீரர் சார்பாக மாவீரர் பெற்றோருக்கு வழங்கப்படுவதற்காக அது பயன்படும் எனவும் குறிப்பிட்டார்.

மாவீரர் துயிலும் இல்லத்தினை எல்லைப்படுத்தி சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளை கட்டி அலங்கரித்ததோடு துயிலுமில்லத்தின் உள்ளேயும் தொகுதிகளாக பிரித்து சிவப்பு, மஞ்சள் கொடிகளால் ஒழுங்கமைத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

மூவின மக்களையும் அழைக்கின்றோம்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் இறுதி நாள் நிகழ்வுகளுக்கான பணிகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டுக்குழுவினர் இலங்கையில் வாழும் மூவின மக்களையும் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.

தாயகக் கனவோடு தமிழீழ தாயகத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை தாம் எப்படியெல்லாம் அஞ்சலித்துப் போற்றுகின்றோம் என்பதை வந்து பார்க்க கேட்டு நிற்கின்றனர்.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு: மக்கள் திரண்டு வந்து பங்கேற்பு | Finalday Arrangements Completed Maweerar Mullitivu

விடுதலை வேள்வியில் ஆகுதியான மாவீரர்களின் உறவினர்களையும் அவர்களின் உணர்வுகளையும் வலிமிகுந்த மன வேதனைகளையும் நேரில் வந்து பார்க்கும் போது தான் எங்கள் செயற்பாடுகள் மீதான நியாயப்பாடுகளை உணர முடியும்.

மாவீரர் நிகழ்வுகளை தடுப்பதோ அன்றி அதனை அவதூறாக விமர்சிப்பதோ அந்த நிகழ்வுகளின் உணர்ச்சி மிகு வலியை அறியாதது தான் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போரில் வீரச்சாவடைந்த ஒருவரை உணர்வெழுச்சியோடு தாம் அஞ்சலித்து போற்றுவதனை தங்கள் பண்பாடாக கடைமையாக கருதுவதாகவும் இதுவே நாளை ஈழத்தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றாகி விடும் என்றும் மன உறுதியோடு அவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமையும் நோக்கத்தக்கது.

வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் பட்டங்களை அங்கீகரிப்பது குறித்து கவனம்

வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் பட்டங்களை அங்கீகரிப்பது குறித்து கவனம்

துயிலுமில்லக் காணியை விடுவிக்க வேண்டும் 

மட்டு, அம்பாறை போராளிகளின் துயிலுமில்லமாக விளங்கியது விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்.

மட்டு அம்பாறை மாவட்டங்களில் இருந்து வடக்குப் போர் முனைக்கு நகர்த்தப்பட்ட போராளிகள் வீரச்சாவடையும் போது அவர்களது வித்துடல்களை மட்டு, அம்பாறை மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் அவற்றை தேராவில் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டதாக முன்னாள் போராளியொருவர் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஒன்பதாயிரம் வரையான மாவீரர்கள் துயிலும் இடமாக தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு: மக்கள் திரண்டு வந்து பங்கேற்பு | Finalday Arrangements Completed Maweerar Mullitivu

கல்லறைகளை கொண்ட துயிலுமில்லத்தின் பகுதி இப்போது சிங்கள இராணுவத்தினர் வசம் இருக்கின்றது.

அதனை விடுவிக்குமாறு தாம் கேட்டுக்கொண்டிருப்பதோடு அந்த நிலத்தினை மீட்டெடுத்திட பல போராட்டங்களையும் நடத்தியவாறு தாம் இருக்கும் இவ்வேளையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த தடை கேட்டு நீதிமன்றத்தினை இலங்கை பொலிஸார் நாடியிருந்தனர் என்பது கவலையளிக்கும் விடயமாகும்.

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு: மக்கள் திரண்டு வந்து பங்கேற்பு | Finalday Arrangements Completed Maweerar Mullitivu

துயிலுமில்லக் காணியை விடுவிக்கும் வரை அதற்கான போராட்டத்தினை நடத்தியவாறே இருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிவப்பு, மஞ்சள் கொடிகளை துயிலுமில்லத்தின் எல்லைகளாக உள்ள இடங்கள் வரை கட்டி அடையாளப்படுத்தியிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

துயிலுமில்லக் காணிக்கு அருகிலுள்ள இடமொன்றில் 2023ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் நோக்கத்தக்கது.

டிசம்பர் மாதத்திற்குள் ஐம்பது வீதத்தால் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

டிசம்பர் மாதத்திற்குள் ஐம்பது வீதத்தால் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை

இலங்கையில் Door to Door விநியோகம் : அறிமுகமாகும் சுங்க வரி

இலங்கையில் Door to Door விநியோகம் : அறிமுகமாகும் சுங்க வரி

நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US