அமைச்சர் ஹரீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் - செய்திகளின் தொகுப்பு
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் வசந்த பண்டார இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை இந்தியாவின் ஒர் பகுதியே என அண்மையில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கூற்று தொடர்பிலேயே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri