மரண வீட்டில் பெண் தொடர்பில் கடும் மோதல் - நால்வர் மருத்துவமனையில் அனுமதி
மொரட்டுவை, எகொட உயன பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கடும் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆண் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில், பெண் உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எகொட உயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
