மொட்டு கட்சியின் தலைமை பதவிக்கு கடும் மோதல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாமலின் பெயர் பரிந்துரை
கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கட்சியின் தலைமைப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கட்சியின் இளம் உறுப்பினர்களால் நாமல் ராஜபக்சவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த தலைவர் தொடர்பில் பொது மக்கள் முன்னணியில் சில பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
மொராக்கோ கடலில் மாயமான பிரித்தானிய சிறுமி: பிரிட்டிஷ் அரசுக்கு பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் News Lankasri