கத்தி குத்து சம்பவத்தில் முடிவடைந்த பிக்குமாருக்கு இடையிலான சண்டை
கண்டி பேராதனை சுபோதாராமய குருக்குலத்தில் வசிக்கும் இரண்டு பிக்குமாருக்கு இடையில் நேற்று மாலை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒரு பிக்கு மற்றுமொரு பிக்குவை கத்தியால் குத்தியுள்ளார்.
24 வயதான பிக்குவை கத்தியால் குத்திய 16 வயதான பிக்கு
கத்தி குத்துக்கு இலக்கான பிக்கு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய பிக்குவை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நடந்துள்ளது. கொஸ்வத்தே சிறிதம்ம தேரர் என அழைக்கப்படும் 16 வயதான பிக்கு 24 வயதான இஹலகம தம்மஜித் என்ற தேரரை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்கான பிக்கு கண்டி வைத்தியசாலையில் 17வது விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பிக்குவை பேராதனை பொலிஸார் நேற்றிரவே கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
