பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்: நிறுத்தி வைக்கக்கப்பட்ட ஒன்றுகூடுதல்
பேராதனைப் பல்கலைக்கழக பொது மாணவர் சங்கம் மற்றும் பீட மாணவர் சங்கங்களில் மாணவர்கள் ஒன்றுகூடுதல், கூட்டங்கள் நடத்துதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரியாவிடை விருந்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததே இந்த முடிவுக்குக் காரணம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரண்டு மாணவர்களும் பேராதனைப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, ஆபத்தான நிலையில் இருந்த ஒரு மாணவர் அறுவை சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி
இத்தகைய சூழலில், 15 ஆம் திகதி இரவு மாணவர்கள் மீண்டும் மோதலுக்குத் தயாராகி வருவதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாம் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எதிர்வரும் தேர்வுகளின் போது பல்கலைக்கழகத்தில் சட்டம் ஒழுங்கு மீறப்படுவதைத் தடுப்பதற்கும் கவனம் செலுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan