குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குழந்தைகளிடையே காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நோய்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அறிவுறுத்தல்
டெங்கு மற்றும் சிக்குன்குனியா அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு ஆபத்தானது என்றும், சிக்குன்குனியா உள்ள குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட பிறகு பல மாதங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவார்கள் என்றும் சிறப்பு மருத்துவர் கூறியுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிக்குன்குனியா ஏற்பட்டால், அது ஆபத்தானது என்றும், இந்த நிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கலாம் என்றும் நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்களில் இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகள் அதிகரித்து வருவதாகவும், இந்த நோய் குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவக்கூடும் என்பதாலும், பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
