மீண்டுமொரு கோவிட் அலையை பண்டிகைக்காலமே தீர்மானிக்கும்! - சுகாதாரத்தரப்பு எச்சரிக்கை
"நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் பாரதூரமான அதிகரிப்பு ஏற்படாவிட்டாலும் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையாமல் காணப்படுகின்றமை அவதானத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
எனவே, பண்டிகைக் காலங்களில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். மீண்டுமொரு கோவிட் தொற்று அலையைப் பண்டிகைக் காலமே தீர்மானிக்கும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 500 ஆகக் காணப்பட்ட நாளாந்தத் தொற்றாளர் எண்ணிக்கை தற்போது 700 வரை அதிகரித்துள்ளமை விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
தொற்றாளர் எண்ணிக்கையை இதனை விடக் குறைவடையச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் வெவ்வேறு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய தொற்றாளர் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது பாரியளவில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாமை அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
மகிழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்வுகளில் விருந்துபசாரங்களின்போது கோவிட் தொற்று அதிகமானோருக்குப் பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். இதற்கு முன்னர் சிறிய கொத்தணிகள் ஏற்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அலுவலகங்களில் ஒன்றாக உணவு உண்பவர்கள் மத்தியில் வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்பட்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
எனவே, பண்டிகைக் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளின் போது மிகவும் அவதானமாகச்
செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால்
வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும்
கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் இரயில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் News Lankasri

மொத்தமாக 8000 உக்ரைனிய வீரர்கள்...ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர் தெரிவித்த பகீர் தகவல்! News Lankasri

2 ரன்னில் இருந்த தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கோபமடைந்த மெண்டார் கம்பீர் வீடியோ News Lankasri

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி News Lankasri

மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ Cineulagam

துப்பாக்கிச்சூட்டுக்கு முன் ஜேர்மனியில் வாழும் ’காதலிக்கு’ குறுஞ்செய்தி அனுப்பிய அமெரிக்க தாக்குதல்தாரி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் தில்லையம்பலம்
குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி
27 May, 2021
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022